கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 2


நீ ஒரு கரை
நான் ஒரு கரை
இடையில் ஓடுகிறது
கண்ணீர்

கடலில் அலையெழுப்பக்
காற்று
என்னில் கவிதை எழுப்ப
நீ

சாக்கடையுலும்
பிரகாசிக்கும் நிலவாய்
என்னில் நீ.

0 விமர்சனம்: